அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் |
திகதி : | 2022-08-10 |
|
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) சபையில் அறிவித்தார்.
அதற்கமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் இன்று (10) பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, கௌரவ விதுர விக்ரமநாயக, கௌரவ நலின் பிரனாந்து, கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா, கௌரவ விஜித ஹேரத், கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், கௌரவ சிறிபால கமலத், கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ முஜிபுர் ரஹுமான், கௌரவ ஹர்ஷண ராஜகருணா, கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ இசுரு தொடன்கொட, கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.