இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

"இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையாக வருவாய் ஈட்டுதல்" தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கலந்துரையாடல்

திகதி : 2022-08-10

“இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையாக வருவாய் ஈட்டுதல்" தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலொன்று நேற்று (09) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் கொண்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிலைபேறான நிதி மையத்தின் (Sustainable Finance Hub of the UNDP) பணிப்பாளர் திரு. மார்கோஸ் நெடோ தனது அனுவபம் மற்றும் அறிவை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டு இதில் பிரதான உரையை நிகழ்த்தினார்.

அரசங்க நிதி பற்றிய குழுவின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்திடம் (UNDP) மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிரிக்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom