19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறப்போவது என்ன? சரியாகத் தெரிந்துகொள்ள

திகதி : 2022-07-18

Print

இந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் ஒருமுறை அனுபவம் இருக்கின்றபோதும் இம்முறை இது விசேடமாகக் காணப்படுகிறது. இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மறைந்ததைத் தொடர்ந்து அப்போதைய பதில் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, பிரேமதாசவின் எஞ்சிய காலத்துக்காக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் இம்முறை வேட்பாளர்கள் சிலர் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருக்கும். அப்படியாயின் அது எமது நாட்டின் வரலாற்றில் புதிய அனுபவமாக இருக்கும்.

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாயின் பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நடைமுறை அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களும் குறித்த சட்டத்தில் படிப்படியாக வழங்கப்பட்டுள்ளன.

 

பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடைமுறை