இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தென் கொரிய சபாநாயகர் நாளை (21) பாராளுமன்றம் வருகை

திகதி : 2022-01-20

நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று (19) இலங்கைக்கு வருகைதந்துள்ள தென்கொரியாவின் பாராளுமன்ற தேசிய சபையின் கௌரவ சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) நாளை (21) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென் கொரிய சபாநாயகர் நாளை (21) மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் படைக்கலச் சேவிதர் நரேந்திர பர்னாந்து ஆகியோர் தென் கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்கவுள்ளனர்.

அதனையடுத்து, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தென் கொரிய கௌரவ சபாநாயகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறும். அதன்பின்னர், தென் கொரிய கௌரவ சபாநாயகர் விசேட விருந்தினர் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வைப் பார்வையிடவுள்ளார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom