இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (21) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கத் தீர்மானம்

திகதி : 2022-01-20

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஜனவரி 18ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பின்னர் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடன உரை தொடர்பில் ஜனவரி 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளையதினமும் (21) தொடர்ந்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நாளை (21) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மதியபோசன இடைவேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom