இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆங்கில மொழித் திறனை மேலும் விருத்திசெய்ய புதிய வேலைத்திட்டம்

திகதி : 2021-11-16

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆங்கில மொழித் திறனை மேலும் விருத்திசெய்ய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது.

தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்தத் திட்டத்திற்கான வளவாளர்களை வழங்குகின்றது.

அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகள் சிலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5 6

7 8

9

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom