இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான ஜப்பான் தூதுவருக்கு கௌரவ சபாநாயகர் பிரியாவிடை மதியபோசன விருந்துபசாரம்

திகதி : 2021-10-26

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமாவுக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (25) பாராளுமன்றத்தில் பிரியாவிடை மதியபோசன விருந்துபசாரமளித்தார்.

இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண, இலங்கைக்கான பிரதி ஜப்பானியத் தூதுவர் கட்சுஹி கட்டாரோ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு ஜப்பானியத் தூதுவர்  சுகியாமா தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற ஜப்பானிய அரசாங்கத்துக்கும், அந்நாட்டு மக்களுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் வலியுறுத்திய வைத்திய கலாநிதி பத்திரன, கொவிட்-19 மூன்றாவது அலைத் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் அரசாங்கம் அஸ்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்கி ஒத்துழைத்தமையைப் பாராட்டினார்.

தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா சுட்டிக்காட்டினார். இலங்கை போன்ற மிகவும் அழகான நாட்டுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து அடுத்த வருடத்துடன் 70 வருடங்கள் பூர்த்தியடைவதையும் அவர் இங்கு நினைவுபடுத்தினார்.

 

 1 2

 3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom