அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம் |
திகதி : | 2020-02-05 |
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் தலைமையில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121இன் ஏற்பாடுகளுக்கமைய 2020 ஜனவரி 24ஆம் திகதி கூடிய தெரிவுக் குழுவின் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
கலாநிதி பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசந்த புஞ்சிநிலமே, தாரக பாலசூரிய, காஞ்சன விஜேசேகர ஆகிய அமைச்சர்களும் டிலான் பெரேரா, பிமல் ரத்னாயக்க, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி எஸ்.எம். முகம்மட் இஸ்மாயில் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






