சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொரடா ஆகியோர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர் |
திகதி : | 2020-01-03 |
பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சபை முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரை அவருடைய அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை அவர் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







