இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர், மரியாதையின் நிமித்தம் சபாநாயகரைச் சந்தித்தார்

திகதி : 2019-10-18

பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கௌரவ துங்-லாய் மார்க், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை நேற்று (17) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்திருந்தார்.

 

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு. ரவிநாத.பி.ஆரியசிங்ஹ, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் திரு. நீல் இத்தவெல, பிரான்ஸ் தூதுவர் திரு. எரிக் லாவெர்டு, இத்தாலி நாட்டின் தூதுவர் திருமதி.ரீடா ஜுலியானா மன்னெல்லா, நெதர்லாந்து தூதுவர் தான்யா கொங்கிஜ்ப், நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெவார்ட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

இச்சந்திப்பின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்களுக்கு சபாநாயகர் மதியபோசன விருந்துசபாரமொன்றையும் வழங்கியிருந்தார்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom