2018 மே 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-05-08

Print

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் பாராளுமன்ற அமர்வை மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமை தாங்கி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல் பற்றிய மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட மூன்று பிரகடனங்களையும் வாசித்தார். மேன்மை தங்கிய சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.


அதனையடுத்து,1505 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 09 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.