2018 ஏப்ரல் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-04-04

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  நம்பிக்கையின்மை பிரேரணை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை முறை


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும்; மற்றும்
•    பத்தாவது தொகுதி – விசேட கணக்காய்வு அறிக்கை – IV ஆம் பகுதி


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை

பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 76; எதிராக 122) பின்னர் நிராகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 2204 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஏப்ரல் 5ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.