இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 மே 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-05-05

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ் 2017.03.01 முதல் 2017.03.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் பற்றிய அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ எஸ். பீ. திசாநாயக்க                   
(ii) கௌரவ தயாசிறி ஜயசேகர                   
(iii) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன                   
(iv) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி    -    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யுத்தத்தினால் குடிபெயர்ந்து வாழும் மக்களை உயிலம்குளத்தில் மீள்குடியமர்த்துதல் தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளை

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இரணதீவிலிருந்து குடிபெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom