2016 ஜூன் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-06-24

Print

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2015 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச் செயலகம்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் பொதுமனு சமர்ப்பிக்கப்பட்டது

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தகவலுக்கான உரிமை சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1616 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூலை 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.