எட்டாவது பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் - 2015 செப்டெம்பர் 01ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை |
திகதி : | 2015-09-01 |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானது.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுவதாக அறிவித்து மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனங்களை வாசித்ததோடு சபாநாயகர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
சபாநாயகர் தெரிவு
8 ஆவது புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு கௌரவ கரு ஜயசூரிய, பா.உ. அவர்கள் பிரதம அமைச்சர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ., கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார். அதனையடுத்து, புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட கெளரவ கரு ஜயசூரிய அவர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டவர்களினால் அக்கிராசனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கெளரவ சபாநாயகர் அக்கிராசனத்திற்கு வந்து அதில் அமர முன்னர் மிகச் சுருக்கமாக சபைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கெளரவ சபாநாயகர் தலைமை வகித்ததோடு, சட்டப்படி உறுதிப்பிரமாணம் செய்து மேசையிலுள்ள உறுப்பினர்கள் பட்டியலில் கையொப்பமிட்டார்.
அதன் பின்னர், வருகை தந்திருந்த கெளரவ உறுப்பினர்கள் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதோடு, மேசை மீதுள்ள உறுப்பினர்கள் பட்டியலில் கையொப்பமிட்டனர்.
அரசாங்க தரப்பு மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த பல்வேறு அரசியட் கட்சிகளின் தலைவர்களினால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன. கெளரவ சபாநாயகர் அதற்கு பதிலுரை ஆற்றினார்.
பிரதி சபாநாயகர் தெரிவு
8 ஆவது புதிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு கௌரவ திலங்க சுமதிபால, பா.உ. அவர்கள் நிமல் சிறிபால த சில்வா, பா.உ., கௌரவ ரவுப் ஹக்கீம், பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார்.
குழுக்களின் பிரதித் தவிசாளர் தெரிவு
8 ஆவது புதிய பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ அ. அடைக்கலநாதன், பா.உ. அவர்கள் கௌரவ எம்.ஏ. சுமந்திரன், பா.உ., கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
புதிய பாராளுமன்றத்தின் பாராளுமன்றச் சபை முதல்வர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பதவிகளுக்கு முறையே கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ., மற்றும் கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கௌரவ சபாநாயகர் அமர்வை பி.ப. 3.00 மணி வரை இடைநிறுத்தினார்.
அரசாங்க கொள்கைக் கூற்றினை முன்வைத்தல்
பி.ப. 3.00 மணிக்கு சபை மீண்டும் கூடியதுடன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் அரசாங்க கொள்கைக் கூற்றினை முன்வைத்தார்.
அதனையடுத்து, கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் 2015 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 0930 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என்ற பிரேரணையை பிரேரித்தார்.
அதன்படி, 1537 மணியளவில் பாராளுமன்றமானது 2015 செப்டெம்பர் 03 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[ அரசாங்க கொள்கைக் கூற்று ]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்













