இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 மார்ச் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-03-06

கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-

‘A’  : பாராளுமன்றத்தில் இந்திய பிரதம அமைச்சரின் உரை
‘B’  : 2015 மார்ச் 13ஆம் திகதியன்று பாதுகாப்பு நடவடிக்கைகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கை
(ii) பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் ஆகியோருக்கெதிரான வன்முறைகளைத் தடுத்தல் குறித்தான எதிர்க்கட்சித் தலைவரின் ஆணைக்குழுவின் அறிக்கை


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

அரசதுறை நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கல்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

அன்றைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம்

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 68; எதிராக 01) திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தல்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 13ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1500 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom