இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 பெப்ரவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-02-19

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதினைந்து மனுக்கள்
(ii) கெளரவ எரிக் பிரசன்ன வீரவர்தன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கையை காலதாமதப்படுத்தல்’ சம்பந்தமான நிலையியற் கட்டளை 23(2) கீழ் கூற்றொன்றை விடுத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ நலின் பண்டார ஜயமஹ அவர்களுக்கு “சுஜீவ சேனசிங்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டமூலம்

சபையினால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom