
8ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாகவும் அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகவும் 2015 ஓகத்து மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று தினங்களிலும் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 03.30 மணி வரை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் தகவல் கருமபீடமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.