இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத்திட்டம்)

உறுப்புரை 151
அவசர மற்றும் எதிர்பாராத செலவுக்காகப் பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் எதிர்பாரா நிகழ்வுகளுக்கான நிதியமொன்றை ஏற்படுத்தலாம். அவசரத் தேவைகளுக்கு என ஏற்கனவே நிதி ஒதுக்கப்படவில்லையென நிதியமைச்சர் திருப்தியடையும் போது, சனாதிபதியின் சம்மதத்துடன் இந்நிதியத்திலிருந்து முற்பணக் கொடுப்பனவொன்றை அனுமதிக்கலாம். அதன் பின்னர் இயலுமான அளவு விரைவாக, முற்பணமாக வழங்கப்பட்ட நிதியினை பதிலீடு செய்வதற்கு ஒரு குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒதுக்கங்கள்
1944ம் ஆண்டின், 16ம் இலக்க, நிதி ஒதுக்கீடுகள் சட்டத்தின் மூலம், பொது ஒதுக்கீட்டு அல்லது விசேட ஒதுக்கீட்டு நிதியில் ஒதுக்கப்படாத, வேறு நிதிகளைப் பாராளுமன்றம் வைத்திருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வகை நிதிகள் பின்னர் பாராளுமன்றத் தீர்மானத்தின் பின்னர் திரட்டிய நிதிக்கு மாற்றப்படலாம்.

உறுப்புரை 154ண
அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மூலமாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது, நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகக், குறிப்பிட்ட மாகாண சபைகளுக்கான நிதியினைப் பாராளுமன்றம் அதன் வருடாந்த வரவு செலவுத்திட்டத்திலிருந்து வழங்கியது. இவ் ஆணைக்குழுவிலே, மத்திய வங்கியின் ஆளுநரும், திறைசேரிச் செயலாளரும் மற்றும் மூன்று பிரதான சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், நிதி, நிர்வாகம், வியாபாரம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுமான வேறு மூன்று பேரும் அடங்க வேண்டும் என உறுப்புரை 154ண நிபந்தனை விதிக்கிறது.

நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களின் தேவைகளை மாகாண நிர்வாகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பிரதான அதிகாரிகளுடன் கலந்துரையாடும். அது, அதன் பரிந்துரைகளுக்கு அடிப்படையாக அமைகின்ற வழிகாட்டற் கோட்பாடுகளை உருவாக்குகின்றது. இதன்போது, உறுப்புரை 154ண (5) இல் குறிப்பிட்டபடி, ஆணைக்குழு, குறிப்பாக சனத்தொகை, தலா வருமானம், ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்தல் மற்றும் தலா வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சனாதிபதிக்குத் தெரிவிக்கப்படும். பின்னர் சனாதிபதி அவற்றை பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுத்துவார். அரசாங்கம் இப்பரிந்துரைகளைக் கவனத்திலெடுத்து, ஆணைக்குழுவினுடனான கலந்தாலோசனையுடன், மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத் திற்குப் போதுமானதான நிதிகளை வருடாந்த வரவு செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்யும்.

2019-03-18 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom