இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ.த சில்வா பெயர்குறித்து நியமனம்

திகதி : 2023-06-07

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வாவை பெயர்குறித்து நியமிக்க பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (ஜூன் 07) தீர்மானிக்கப்பட்டது.

121வது நிலையியற் கட்டமைக்கு அமைய இந்தப் பெயர்குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டமும் இன்று நடைபெற்றது.

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரிலும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

 

copf-chair-june7

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom