இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவு

திகதி : 2023-04-27

பாராளுமன்றத்தில் இன்று (ஏப். 27) நடைபெற்ற பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராக இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க அவரது பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஸ்வரன் அதனை வழிமொழிந்தார்.

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் செயலாற்றுகை, நிதி உறுதிப்பாடு, முதலீட்டு முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் மற்றும் அரச - தனியார் பங்குடமைகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பரிசீலிப்பது இந்தக் குழுவின் பணிகளாகக் காணப்படுகின்றன.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு போன்ற ஏனைய நிதிக் குழுக்களின் விடயதானங்களுடன் முரண்படாத வகையில் குழுவின் செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய தலைவரை சந்தித்துக் கலந்துரையாடுவதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.  

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ வருண லியனகே மற்றும் கௌரவ (கலாநிதி) நாளாக கொடஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வாவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom