வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் கீழ் காணப்படும் செலசினே, ரூபவாஹினி மற்றும் ITN உள்ளிட்ட நஷ்டமீட்டும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைமைக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது |
திகதி : | 2023-04-03 |
வெகுஜன அமைச்சின் கீழ் காணப்படும் செலசினே, தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
வெகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அதன் தலைவர் கௌரவ பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் (மார்ச் 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் விசேடமாக செலசினே நிறுவனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வெளித் தரப்பினருக்கு சில விளம்பரங்களை வழங்குவது மற்றும் வாடகை அடிப்படையில் கமரா உபகரணங்களைப் பெறுவது குறித்து அமைச்சின் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார். உள்ளக நிபுணர்களின் படைப்பாற்றலில் சிக்கல் இருப்பதாகவும், தகுதியற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுவதே காரணம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனால் வெளிநபர்களிடம் வழங்கி தயாரிப்புக்களை மேற்கொள்வது மலிவானது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த அனைத்து நிறுவனங்களில் இருந்தும் தேவையற்ற ஊழியர்களை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தற்போது இலாபகரமான நிலையில் இல்லை எனவும், அதனை இலாபகரமான ஒன்றாக மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனத்தில் உள்ள அதிகப்படியான ஊழியர்களை நீக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வரையறுக்கப்பட்ட சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் இந்நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
வரையறுக்கப்பட்ட அசோசியேட் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடட், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், இலங்கை அச்சகக் கூட்டுத்தாபனம், இலங்கை பத்திரிகை சபை போன்ற நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளும் இங்கு அங்கீகரிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாந்த பண்டார, கௌரவ டி. பி. ஹேரத், கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ ஜனக வக்கும்புர, கௌரவ அசோக பிரியந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ எஸ்.எம். எம். முஷாரப், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கெளரவ சமன்பிரிய ஹேரத், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ பைசல் காசிம், கௌரவ எம். எஸ். தௌபீக், கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ முதித பிரிஷாந்தி. த சொய்சா, கௌரவ. இராதாகிருஷ்ணன், கௌரவ வீரசுமண வீரசிங்ஹ, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ. எல். எம். அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










