இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் கௌரவ தலதா அத்துகோரல தெரிவு

திகதி : 2023-03-24

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் குழு 2023.03.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முதிதா பிரசாந்தி வழிமொழிந்தார்.

இந்தக் குழுவுக்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் ஆகிய நிறுவனங்களை அழைக்க முடியும் என இதன்போது புலப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ டீ. வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கௌரவ ஜகத் சமரவிக்ரம மற்றும் கௌரவ (பேராசியர்) திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom