தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவு |
திகதி : | 2023-03-22 |
தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று (மார்ச் 21) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குணதிலக ராஜபக்ஷ முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.
அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் தொடர்பில் மேற்பார்வை செய்தல் மற்றும் நாட்டின் பௌதிகத் திட்டங்கள் தொடர்பில் இக்குழு பணியாற்றவுள்ளதால் கட்சி பேதமின்றி செயற்பட எதிர்பார்ப்பதாக குழுவின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்ரமரத்ன , கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ ஹர்ஷண ராஜகருணா மற்றும் கௌரவ சுதத் மஞ்சுள ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








