எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் முதல் தடவையாகக் கூடுகின்றன |
திகதி : | 2023-03-07 |
எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் நாளை (மார்ச். 08) மற்றும் நாளை மறுதினம் (09) ஆகிய தினங்களில் முதல் தடவையாகக் கூடவுள்ளன.
இதற்கமைய இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் எட்டுக்குமான தலைவர்கள் முதலாவது கூட்டத்தில் நியமிக்கப்படவிருப்பதுடன், இதில் நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் ஆளும் கட்சியிலிருந்தும், நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளன.
பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்ததுடன், இதில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுக் குழுக்களே நளை மற்றும் நாளை மறுதினம் கூடவுள்ளன.
1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
2) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
3) பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
4) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
5) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 11)
6) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
7) பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 09)
8) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 11)
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






