இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வழிவகைகள் பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

திகதி : 2023-02-21

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (பெப். 21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு அமைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய, கௌரவ லஸந்த அழகியவன்ன, கௌரவ சிசிர ஜயகொடி, கௌரச சஷீந்திர ராஜபக்ஷ, கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, கௌரவ டப்ளியூ.டி.ஜே. செனெவிரத்ன, கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ எஸ்.எம்.எம். முஸ்ஸாரப், கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், கௌரவ இஷாக் ரஹுமான், கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட மற்றும் கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார ஆகியோர் வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom