8வது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

8வது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

- 2020 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசினது அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரை (2)(இ) உப உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டியுள்ள அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், 2020 மார்ச் 02 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைப்பதுடன், 2020 மே மாதம் 14 ஆம் திகதியன்று புதிய பாராளுமன்றமொன்றைக் கூடுமாறு அழைக்கிறார்.

 

இதற்கு மேலதிகமாக, 2020.04.25 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கும், 2020.03.12 ஆம் திகதி முதல் 2020.03.19 ஆம் திகதி வரையான காலப் பகுதி பெயர்குறித்த நியமனக் காலப்பகுதியாகவும் குறித்துரைக்கப்படுகிறது.

 

[ 2020 மார்ச் 02ஆம் திகதிய 2165/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ]

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-06-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு