இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில்

2025-09-23
1
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக நாளை (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2025.09.21ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-23 மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல...
2025-09-22 தேசிய கணக்காய்வு (திருத்த)...
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
மேலும்

2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-24
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-24 2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை...
2025-09-23 2025 செப்டம்பர் 23ஆந் திகதியின் சபை...
2025-09-12 2025 செப்டம்பர் 12ஆந் திகதியின் சபை...
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத்திட்டம்)

அறிமுகம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் என பாராளுமன்ற உறுப்பினர்களால் குறிப்பிடப்படுவது, மிகவும் பிரபல்யமாக வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகின்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்தக் கலண்டரில், வருடாந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்தலும் அதனைத் தொடர்ந்து வரும் விவாதமும், ஓர் ஆண்டில் பாராளுமன்றம் விவாதிக்கும் சட்டவாக்கம், பிரேரணைகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் விட முதன்மை பெறுகிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிற சட்ட மூலங்களைப் போன்று வரவு செலவுத்திட்டமும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படும் போது மட்டுமே சட்டமாகின்றது.

வரவு செலவுத்திட்டம் பிற சட்டமூலமொன்றின் நடவடிக்கை முறைகளைப் பின்பற்றினாலும் கூட அது ஒரு சராசரியான நிதிச்சட்டமூலம் அல்ல. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, கடந்த ஆண்டுகளில் அதன் செயலாற்றுகை, மேலும் அது மேற்கொள்ள எண்ணியுள்ள புதிய திருப்பங்கள் என்பவற்றைப் பற்றி நாட்டுக்கும், உண்மையில் முழு உலகுக்கும், அறிவிப்பதற்கு நிதியமைச்சர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது ஒரு மரபாகும். எனவே அனைத்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தக முயற்சியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அரச நலன்புரி உதவிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கும் அது முக்கியமானதாகும்.

 

பகிரங்க நிதிகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பான அரசியலமைப்பின் ஏற்பாடுகள்

அனைத்து பொது நிதிகள் மீதான பாராளுமன்றத்தின் அடிப்படை அதிகாரங்களும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு - அத்தியாயம் XVII இல் வகுக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை 148
ஏதேனும் வரி, வீதவரி அல்லது வேறு அறவீட்டை விதிப்பதற்குக் கருதும் ஏதேனும் ஒரு பொது அதிகாரசபை அல்லது உள்ளூர் அதிகாரசபை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட அதிகாரத்தின் கீழ் மட்டுமே அவ்வாறு அறவிட முடியுமென இவ்வுறுப்புரை கூறுகின்றது. எல்லா பகிரங்க நிதிகளும் பாராளுமன்றத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.


உறுப்புரை 149
குறித்த ஒரு நோக்கத்துக்காக ஏலவே ஒதுக்கப்படாத பொது நிதிகள், திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படும். அரசுக்குச் செலுத்தப்படும் வரிகள், விதிப்பனவுகள், வீத வரிகள், தீர்வைகள் மற்றும் ஏனைய எல்லா வரவுகளும் வருமானங்களும் குறித்த ஏதேனும் செயற்பாட்டுக்காக ஏலவே ஒதுக்கப்பட்டிராவிடின், திரட்டு நிதியத்தில் சேர்க்கப்படும். திரட்டு நிதியத்திலிருந்து எந்நோக்கங்களுக்காக நிதிகள் பெறப்படலாம் என்பது பற்றிப் பாராளுமன்றம் தீர்மானிக்கலாம். இது பொதுவாகப் பகிரங்கக் கடன் மீதான வட்டி, கடனாழ் நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் திரட்டு நிதியம் தொடர்பான செலவுகள் என்பவற்றை உள்ளடக்கும்.


உறுப்புரை 150
குறிப்பிட்ட ஒரு நிதியாண்டில், குறித்ததொரு பொதுச் சேவைக்காக, குறித்ததொரு தொகைப்பணத்தை வழங்குவதற்கான தீர்மானமொன்றை அல்லது சட்டமொன்றை பாராளுமன்றம் நிறைவேற்றியதும், திரட்டு நிதியத்திலிருந்து அரசாங்கம் நிதிகளைப் பெறலாம். பாராளுமன்றம் அதிகாரமளித்தவுடன், நிதியமைச்சரினால் கையொப்பமிடப்பட்ட ஆணையின் பிரகாரம் மட்டுமே குறித்த தொகை மீளப்பெறப்படலாம்.

 

150ம் உறுப்புரையின் (3) மற்றும் (4) ம் பந்திகள் இந்தப் பொதுவான நடைமுறைக்கு இரண்டு விதிவிலக்குகளைத் தருகின்றன.

  1. இது, பாராளுமன்றமானது, வரவு செலவுத்திட்டம் மூலமாக நிதியினை ஒதுக்குவதற்கு முன்பாகக் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் பிரயோகிக்கப்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, புதிய பாராளுமன்றம் கூடவுள்ள திகதிக்கு முன்னுள்ள 3 மாதங்களுக்கு அரச சேவைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளுக்கு அனுமதியளிக்க, சனாதிபதிக்கு அதிகாரம் உண்டு
  2. சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கும் போது, அதற்கான பணம் ஏற்கனவே பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படாத சந்தர்ப்பத்திலே, தேர்தல் ஆணையாளருடன் கலந்தாலோசித்ததன் பின், திரட்டிய நிதியில் இருந்து நிதியினை வழங்குவதற்கு சனாதிபதி அதிகாரமளிக்கலாம்
2019-03-18 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom