இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஜோர்ஜியாவின் சபாநாயகரைச் சந்தித்தார்

திகதி : 2023-11-01

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜோர்ஜியா நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ ஷல்வா பபுவாஷ்விலி அகியோருக்கிடையிலான சுமுகமான சந்திப்பு இடம்பெற்றது.

அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரண்டு சபாநாயகர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ மாயாதுன்ன சிந்தக்க அமல், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom