இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஆங்கில மொழி பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பாராளுமன்ற பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

திகதி : 2023-09-22

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆங்கில மொழி பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த பாராளுமன்றப் பணியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்சா அபேரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் தட்சணராணி, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஷியாமா பெர்னாந்து, பிரதான உத்தியோகத்தர் மஞ்சுளா விதானகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த மற்றும் பதில் உதவிப் பணிப்பாளர் பி.பி.ரவிராஜ் மற்றும் அதன் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

1 2

3 4

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom