இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2023.08.24

திகதி : 2023-08-24

சபாமண்டபத்தில் சபையின் அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போதும், சில சந்தர்ப்பங்களில் சபா மண்டபத்துக்கு வெளியேயும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்ற பணியாளர்கள், செயலாளர் குழு மற்றும் அதன் பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் அதியுயர் சபையின் கௌரவத்துக்குப் பொருத்தமற்றவை அல்லது ஏற்புடையவை அல்ல என சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக சபாநாயகரின் அறிவிப்பை அறிவித்த பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (ஆக. 24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பாக சபை அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போது பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய இந்தப் பணிகளை சுயாதீனமாக மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு கௌரவ சபாநாயகர்/சபைக்குத் தலைமைதாங்கும் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கும் அல்லது உதவும் அதிகாரிகள் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமைய அரசியலமைப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற செயலாளர் குழுவுக்கு, சுயாதீனமாக அல்லது பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதைத் தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அமையலாம் என்பதால், இதுபோன்று பாராளுமன்ற செயலாளர் குழுவில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom