நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம் - இந்திய உயர்ஸ்தானிகர் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போது தெரிவிப்பு |
திகதி : | 2023-08-23 |
உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (ஆக. 23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கௌரவ (கலாநிதி) எஸ். ஜெயசங்கர் வீடியோ செய்தி மூலம், இந்நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அங்கத்துவ உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









