IMF நிறைவேற்றுக் குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அறிவித்தார் - சபாநாயகர் சபையில் அறிவிப்பு |
திகதி : | 2022-09-22 |
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஏற்படுத்தப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்த அனுமதி கிடைத்ததன் பின்னர் உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
IMF உடன்படிக்கை குறித்து நேற்றுப் பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம் தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்து சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சரவையும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை என்றும், அனைத்து தகவல்களும் கிடைத்த பின்னர் விரைவாக அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தனக்குத் தெரிவித்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். அதேபோன்று, இது தொடர்பில் எதிர்க்கட்சி உள்ளிட்ட உரிய அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






