இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மூன்று சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

திகதி : 2022-09-16

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு (130, 132) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களிலும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய, 2022ஆம் ஆண்டு 22ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 23ஆம் இலக்க வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 24ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும் இந்த மூன்று சட்டங்களும் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டமூலங்கள் மூன்றும் கடந்த 08ஆம் திகதி விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

 

act

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom