பிரதேச சபைகளைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்குப் பாராளுமன்றத்தில் விசேட நிகழ்ச்சி |
திகதி : | 2022-09-09 |
பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 100 பெண் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு பவ்ரல் அமைப்பும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதற்கமைய சட்டமியற்றல் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் உள்ளிட்ட துறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வூட்டப்படும். அவர்களுக்காக பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைச் சார்த்த இளைஞர் யுவதிகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான எதிர்வரும் 16ஆம் திகதி பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சிகளும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






