அத்தியாவசிய பொதுச் சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை எதிர்வரும் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்கு |
திகதி : | 2022-07-04 |
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய அதிமேதகு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விடுக்கப்பட்ட கட்டளையுடன் தொடர்பான பிரகடனம் எதிர்வரும் 06 ஆம் திகதி விவாதமின்றி பாராளுமன்றத்தின் அனுமதிக்காகச் சமர்பிக்கப்படவுள்ளது.
நேற்று (03) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தக் கட்டளை விடுக்கப்பட்டது.
அதற்கமைய, இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம் மற்றும் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு உள்ளிட்ட சுகாதார தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட சேவைகள் அத்தியாவசிய பொதுச்சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






