இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜனாதிபதியின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்திவைப்பது தொடர்பான பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது

திகதி : 2022-05-17

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமற்போனதன் மீதான பாராளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த பிரேரணையை எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.

ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை கடந்த 11ஆம் திகதி ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் முழு ஐந்து நாட்களின் பின்னரே அதாவது 20ஆம் திகதி இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நிலையியற் கட்டளையை இடைநிறுத்திவைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறியபோது இதற்குக் குழு இணங்கியது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom