தென்கொரிய அரச கொள்கைகள் ஒருங்கிணைத்தல் அமைச்சர் சபாநாயகரை சந்தித்தார் |
திகதி : | 2022-04-06 |
தென்கொரிய அரச கொள்கைகள் ஒருங்கிணைத்தல் அமைச்சர் யுன் சியோல் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜியோங் வூஜின் அவர்களும் கலந்துகொண்டார்.
தென்கொரிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பொருளாதார மற்றும் கலாசார மேம்பாட்டுக்கு தென்கொரிய அரசின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாக தென்கொரிய அரச கொள்கைகள் ஒருங்கிணைத்தல் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இலங்கை தற்பொழுது முகங்கொடுக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண தென்கொரியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவு அத்தியாவசியமானது என சபாநாயகர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் தென்கொரிய அரசியல் விவகார பிரதியமைச்சர் ரியூ டே யோங் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இலங்கை பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலகவும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்














