இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 வருடத்துக்கான சர்வதேச மகளீர் தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது – படைக்கல சேவிதர் திணைக்களம்

திகதி : 2022-03-08

‘நிலைபேறான நாளைக்கு பால்நிலை சமத்துவம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளீர் தினத்தை கொண்டாடுவதற்கு சமாந்தரமாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களம் சர்வதேச மகளீர் தினத்தை இன்று (08) கொண்டாடியது.

படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தலைமையில், பிரதி படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன, உதவிப் படைக்கல சேவிதர் அசிந்த குரே ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. படைக்கல சேவிதர் திணைக்களத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் சேவை இங்கு பாராட்டப்பட்டது.

சர்வதேச மகளீர் தினத்துக்கு சமாந்தரமாக இவ்வாறான நிகழ்வொன்றை படைக்கல சேவிதர் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தமை இதுவே முதற்தடவையாகும்.

 

1

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom