இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஐந்து சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

திகதி : 2022-02-18

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 5 சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தினார்.
 
அதற்கமைய, கடந்த 09 மற்றும் 10 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை இவ்வாறு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம், 2022 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டம், 2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டம், 2022 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டம் ஆகிய சட்டங்கள் நேற்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

 

act

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom