2018 பெப்ரவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-02-06 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ அகமதுலெப்பை முஹம்மது நசீர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : 14ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
‘B’ : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை முறை
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு மற்றும் பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை பிரதம அமைச்சர், கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1600 மணியளவில் பாராளுமன்றமானது 2018 பெப்ரவரி 19ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






