இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மே 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-05-20

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
‘B’  :  அரசாங்க நிதி பற்றிய குழுவில் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலீடுகளை அதிகரித்து வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர், கௌரவ ரஊப் ஹகீம் - சீரற்ற காலநிலை காரணமாக நாடு முகங்கொடுத்த அவசரகால நிலைமையிலிருந்து மீள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

(ii) நிதி அமைச்சர், கௌரவ ரவி கருணாநாயக்க - தற்போதைய நிலைமை தொடர்பானது

(iii) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா - அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வெள்ள மற்றும் ஏனைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்பானது

ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குறைநிரப்பும் தொகை - தலைப்பு 240 - நிகழ்ச்சித் திட்டம் 2

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வரையறுக்கப்பட்ட ஹம்பந்தோட்டை உப்பு நிறுவனத்தில் உப்பு உற்பத்தி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1155 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom