இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜனவரி 29ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-01-29

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2013 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ பி. ஹரிசன்    - 1 மனு
(ii) கெளரவ பாலித தெவரப்பெரும  - 8 மனுக்கள்
(iii) கெளரவ அப்துல் ஹலீம்   - 3 மனு

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ எம். பீ. ஏ. அஸீஸ்
(ii) மறைந்த கௌரவ டி. எம். செனெவிரத்ன


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(318 ஆம் அத்தியாயமான) பௌத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு

“பௌத்த அறநிலையங்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களுக்கு “அபிமானி சமூக அபிவிருத்தி மற்றும் கலாசார மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1418 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom